என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விபத்தை தடுக்க 98 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    மாவட்டத்தில் விபத்தை தடுக்க 98 இடங்களில் 248 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்ட போது, மாவட்டத்தில் விபத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் விபத்து, உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

    ஏற்கனவே விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கூடுதலாக கடலூரில் ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, பாரதிசாலை சினிமா தியேட்டர் அருகில், மோகினி பாலம், செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சாவடி, குட்டியாங்குப்பம், நல்லாத்தூர், சிதம்பரம் வண்டிக்கேட், புறவழிச்சாலை, வயலூர் ரோடு, சி.முட்லூர், கீரப்பாளையம் உள்பட 98 இடங்களில் மொத்தம் 248 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விபத்துகள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
    Next Story
    ×