என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்க காகிதங்கள் பறிமுதல்
Byமாலை மலர்22 Aug 2020 9:01 PM GMT (Updated: 22 Aug 2020 9:01 PM GMT)
துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அட்டை பெட்டியில் ரூ.78 லட்சம் மதிப்புடைய 1½ கிலோ தங்க காகிதங்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அட்டை பெட்டியில் ரூ.78 லட்சம் மதிப்புடைய 1½ கிலோ தங்க காகிதங்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா ஊரடங்கால் துபாயில் சிக்கி தவித்த இந்தியர் களை ‘வந்தே பாரத்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறப்பு விமானம் ஒன்று அழைத்து கொண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. விமானத்தில் வந்தவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை சோதனைகள் முடிந்து வெளியே வந்தபோது, விமானத்தில் வந்திறங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்கவரின் உடைமைகள் வந்திருந்தது. இதை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் கொண்ட அட்டை பெட்டி இருந்தன.
அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் தங்கத்தை காகிதங்களாக மாற்றி யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க கார்பன் பேப்பருடன் சுற்றி படுக்கை விரிப்புகளில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சுமார் ரூ.78 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 450 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள கள்ளக்குறிச்சி வாலிபரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அட்டை பெட்டியில் ரூ.78 லட்சம் மதிப்புடைய 1½ கிலோ தங்க காகிதங்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா ஊரடங்கால் துபாயில் சிக்கி தவித்த இந்தியர் களை ‘வந்தே பாரத்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறப்பு விமானம் ஒன்று அழைத்து கொண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. விமானத்தில் வந்தவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை சோதனைகள் முடிந்து வெளியே வந்தபோது, விமானத்தில் வந்திறங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்கவரின் உடைமைகள் வந்திருந்தது. இதை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் கொண்ட அட்டை பெட்டி இருந்தன.
அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் தங்கத்தை காகிதங்களாக மாற்றி யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க கார்பன் பேப்பருடன் சுற்றி படுக்கை விரிப்புகளில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சுமார் ரூ.78 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 450 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள கள்ளக்குறிச்சி வாலிபரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X