என் மலர்
செய்திகள்

விபத்து
புதுவையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி
புதுவையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி:
புதுவை தவளக்குப்பம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மோகன பிரசாத் (வயது 21). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார். அண்ணசாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், மோகன பிரசாத் ஒட்டிவந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோகனபிரசாத் மோட்டார் சைக்கிளில் இருந்த தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மோகனபிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






