என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் 25-ந்தேதி 2 மணிநேரம் கடையடைப்பு போராட்டம்
Byமாலை மலர்22 Aug 2020 10:48 AM GMT (Updated: 22 Aug 2020 10:48 AM GMT)
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை கடைகளை அடைத்து, அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கடைசி நாளான நேற்று வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா குறித்த முழு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து பணியாளர்களையும் நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை கடைகளை அடைத்து, அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கடைசி நாளான நேற்று வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா குறித்த முழு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து பணியாளர்களையும் நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை கடைகளை அடைத்து, அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X