என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு
Byமாலை மலர்19 Aug 2020 10:27 AM GMT (Updated: 19 Aug 2020 10:27 AM GMT)
விநாயகர் சதுர்த்தி விழாவை சமூக இடைவெளியுடன், அரசு அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:
பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் பாஸ்கர், விஜயரங்கன், அக்னி கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வினோத், நகர தலைவர் வேலு.வெங்கடேசன், ஊடக பிரிவு ஜனனி ஸ்ரீதர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
இந்துக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் மக்களின் மன உணர்வை மதித்து சில ஆலயங்களில் திருவிழா நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையும் சமூக இடைவெளியுடன், அரசு அனுமதிக்கும் உரிய எண்ணிக்கையோடு கடலூர் மாவட்டம் முழுவதும் கொண்டாட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X