search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டு யானை
    X
    காட்டு யானை

    கடை, வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்

    கூடலூர் பகுதியில் கடை மற்றும் வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
    கூடலூர்:

    கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, கரடி, சிறுத்தைபுலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கூடலூர் ஆமைக்குளம் அரசு கல்லூரிக்கு செல்லும் சாலையில் உசேன் என்பவரின் கடையின் கதவை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் கடைக்குள் தும்பிக்கையை நுழைத்து அங்கு வைத்திருந்த பொருட்களை தின்றும், வெளியே வீசியும் சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையொட்டி வனத்துறையினரை நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் வருகையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல் கூடலூர் வேடன் வயல் பகுதியில் 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. அப்போது தொழிலாளி செல்வம் என்பவரது வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த செல்வம் அச்சம் அடைந்தார். தொடர்ந்து காட்டு யானைகள் வீட்டு முன்பு அமைத்திருந்த கொட்டகையை சரித்தது, வீட்டின் கூரையை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றன.

    இதில் ஒரு யானை தட்டக்கொல்லி, 2, 1-ம் மைல் வழியாக சாலையில் நடந்து சென்று, ஆனைசெத்த கொல்லி வழியாக தனியார் தோட்டத்துக்குள் சென்றதாகவும், மற்றொரு யானை வேறு வழியாக வனத்துக்குள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பார்வையிட்டனர்.
    Next Story
    ×