என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 79 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 898 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 378 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவிட் கேர் மையங்களில் 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 154 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 31 பேர் நேற்று வீடு திரும்பினர். இவர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் மீனா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சூரியநாராயணன், உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் முகமதுரபி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்த சிவகங்கையை சேர்ந்த 60 வயது ஆண், மேலப்பூங்குடியை சேர்ந்த 57 வயது பெண், காரைக்குடியை சேர்ந்த 55 வயது பெண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    Next Story
    ×