என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீலகிரியில் 42,871 பேருக்கு கொரோனா பரிசோதனை

    நீலகிரியில் இதுவரை 42,871 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அடுத்த 2 மாதங்களில் தொற்று வேகமாக பரவியதால் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் ஆயிரத்தை எட்டி உள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுவரை கொரோனா வைரஸ் உறுதியான 1,010 பேரில் 913 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 94 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரியில் இதுவரை 42,871 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொடர்ந்து வைரஸ் உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அதிகம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்வதால் வைரஸ் பரவல் குறைந்து இருக்கிறது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இ-பாஸ் பெற்று வந்த 825 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×