search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    தனிநபர் இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

    தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் தனிநபர் இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    வாய்மேடு:

    தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் முத்துகண்ணு மற்றும் ஊழியர்கள் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனிநபர் இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அதனை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று துண்டு பிரசுரம் அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டன. ஆய்வின்போது பேரூராட்சி பணியாளர்கள் அன்பு, குமார், ஜெயச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×