search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ முகாம்
    X
    மருத்துவ முகாம்

    அம்மாபேட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை

    அம்மாபேட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டையில் பெண் டாக்டர் உள்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர் குடும்பம் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதுடன், அங்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. மேலும் அம்மாபேட்டை வட்டார மருத்துவ அதிகாரி அருள்மணி தலைமையில் டாக்டர் திவாகர் அங்குராஜ், பேரூராட்சி செயல் அதிகாரி சுரேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் வள்ளிகுமார், குப்பன் ஆகியோரை கொண்ட குழுவினர் தனிமைப்படுத்த பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த 71 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
    Next Story
    ×