என் மலர்
செய்திகள்

கைது
வேலூரில் தங்கும் விடுதியில் சூதாடிய 17 பேர் கைது - ரூ.2¼ லட்சம் பறிமுதல்
வேலூரில் தங்கும் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் அண்ணாசாலை ஊரீசு கல்லூரி எதிரே உள்ள தங்கும் விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார் அந்த தங்கும் விடுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 4 பேரும், அதன் அருகேயுள்ள மற்றொரு அறையில் 13 பேரும் தங்கியிருந்தனர்.
அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் வேலூர் வேலப்பாடி, கொசப்பேட்டை, கஸ்பா, காட்பாடி, வெட்டுவானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், விடுதியின் மேலாளரிடம் அனுமதி பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதையடுத்து 17 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 140 பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததை அறிந்த விடுதி மேலாளர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வேலூர் அண்ணாசாலை ஊரீசு கல்லூரி எதிரே உள்ள தங்கும் விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார் அந்த தங்கும் விடுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 4 பேரும், அதன் அருகேயுள்ள மற்றொரு அறையில் 13 பேரும் தங்கியிருந்தனர்.
அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் வேலூர் வேலப்பாடி, கொசப்பேட்டை, கஸ்பா, காட்பாடி, வெட்டுவானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், விடுதியின் மேலாளரிடம் அனுமதி பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதையடுத்து 17 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 140 பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததை அறிந்த விடுதி மேலாளர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Next Story






