search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    காளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை

    காளையார்கோவில் அருகே நண்பர்களுடன் நின்றிருந்த வாலிபரை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் அருகே உள்ள உலகஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார் (வயது 23). இவர் நேற்று மாலை காளையார்கோவிலை அடுத்த மாந்தாளி கண்மாய் பகுதியில் தனது நண்பர்களுடன் நின்றிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் அருண்குமாரை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட அருண்குமார் மீது காளையார்கோவில், கோவை ஆகிய பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடத்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×