search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருவலம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

    திருவலம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவலம்:

    திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 60), வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×