என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் இன்று மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று: 98 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று மேலும் 5875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
    தமிழகத்தில் இன்று மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர். 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்று 98 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 75 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர.

    இன்று 60,344 மாதிரிகளும், 58,505 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 27,79,062 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 26,77,017 நபருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×