என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிப்பு
Byமாலை மலர்2 Aug 2020 12:18 PM GMT (Updated: 2 Aug 2020 12:18 PM GMT)
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் சளி, இருமல் காணப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாநகராட்சி பகுதியில் 11 சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
3-வது மண்டலம் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்த முகாமில் 106 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முகாமை சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் லூர்துசாமி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இதேபோல சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் பகுதியில் 2-வது மண்டலம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. அங்கு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
மேலும் முகாம்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகளும் பரிசோதனை செய்து கொண்டனர். ஒரேநாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டதாக நகர்நல அலுவலர் சித்ரசேனா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X