என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை - தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம்
Byமாலை மலர்26 July 2020 8:58 AM GMT (Updated: 26 July 2020 8:58 AM GMT)
வேலூரில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. மாங்காய் மண்டி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம் அடைந்தன.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை மற்றும் இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று பகல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதிகபட்சமாக 95.4 டிகிரி வெயில் பதிவானது. மதியம் 2 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் 1½ மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சீராக மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். வேலூர் மாங்காய் மண்டி பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் இரும்புத்தகடுகளால் 85 கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் 25 கடைகளின் இரும்புத்தகடுகள் பறந்து உருக்குலைந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைகள் மழையில் நனைந்தன. காய்கறி கடைகளை பழைய படி நேதாஜி மார்க்கெட்டுக்கு மாற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
சத்துவாச்சாரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள சாலை மற்றும் அப்பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியது. மழைநீர் வெளியேற போதிய வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதேபோல் கஸ்பா, கொணவட்டம், கன்சால்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் ஓடியது.
மழைநீர் செல்ல கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டும் எனப் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பரவலான மழையால் பல்வேறு பகுதிகளில் குளம், குட்டைகளில் தண்ணீர் பெருகி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X