என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கூடலூர் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

    கூடலூர் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் துப்புகுட்டிபேட்டையை சேர்ந்தவர் கந்தநாதன். இவரது மகன் புவனேஷ்வரன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் குடும்பத்தினர் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த புவனேஷ்வரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெள்ளி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×