என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுக்கோட்டையில் நாளை முதல் கடைகள் முழு அடைப்பு

    புதுக்கோட்டையில் மிகவும் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால் நாளை முதல் கடைகள் அடைக்கப்படுகின்றன.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மிகவும் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை கடைகளை அடைக்கின்றனர். இதனால் தளர்வு இல்லாத முழு ஊரடங்கா? என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

    இதுபற்றி மாவட்ட நிர்வாக தரப்பில் வணிகர்கள் கடைகளை மட்டும் அடைக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பால், மருந்து கடைகளை தவிர மற்ற எந்த கடைகளும் திறக்கப்படாது என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க நேற்று கடைவீதிக்கு அதிக அளவில் வந்தனர். 

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். சந்தையில் நேற்று காலை முதல் மதியம் வரை கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×