என் மலர்
செய்திகள்

கபசுர குடிநீர்
அறந்தாங்கி நகராட்சியில் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கல்
அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர், நகராட்சி நிர்வாகம், வர்த்தக சங்கத்தினர், தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 4 நாட்களாக தன்னார்வலர்களுடன் நகராட்சி நிர்வாகம், வர்த்தக சங்கம் இணைந்து அம்மா உணவகத்தில் கபசுர குடிநீர் தயார் செய்து, அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். நேற்று பட்டுக்கோட்டை சாலையில் சாமி நகரில் உள்ள வீடுகளுக்கு அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் பரணி, கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.
Next Story






