search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    வெள்ளோடு அருகே வீடு புகுந்து நகை திருட்டு

    வெள்ளோடு அருகே வீடு புகுந்து நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை:

    வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி சாலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 43). விவசாயி. மனைவி ரேவதி. பெருந்துறை எல்லைமேட்டில் உள்ள ஒர்க்‌ஷாப்பிலும் பாலசுப்பிரமணி வேலை பார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோரும், ரேவதியும் தோட்டத்திற்கு சென்று விட்டார்கள். பாலசுப்பிரமணியமும் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் அனைவரும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணி வெள்ளோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×