என் மலர்
செய்திகள்

கைது
சாராயம் கடத்திய வாலிபர் கைது
நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று திட்டச்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் மோட்டார்சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த வீரபாண்டி (வயது36) என்பதும், 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






