என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்18 July 2020 5:36 PM GMT (Updated: 18 July 2020 5:36 PM GMT)
பவானி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
பவானியை அடுத்து உள்ள ஊராட்சிக்கோட்டை புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவருடைய மகன் கிறிஸ்டோபர் (வயது 20). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சபரிமுத்து, கிறிஸ்டோபரிடம் மது பழக்கத்தை கை விடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த கிறிஸ்டோபர் தற்கொலை செய்ய முடிவெடுத்து, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டார். மேலும் தான் விஷம் குடித்து விட்டதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் கிறிஸ்டோபரை மீட்டு, பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானியை அடுத்து உள்ள ஊராட்சிக்கோட்டை புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவருடைய மகன் கிறிஸ்டோபர் (வயது 20). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சபரிமுத்து, கிறிஸ்டோபரிடம் மது பழக்கத்தை கை விடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த கிறிஸ்டோபர் தற்கொலை செய்ய முடிவெடுத்து, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டார். மேலும் தான் விஷம் குடித்து விட்டதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் கிறிஸ்டோபரை மீட்டு, பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X