என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை- நாராயணசாமி தகவல்
Byமாலை மலர்13 July 2020 7:08 AM GMT (Updated: 13 July 2020 7:08 AM GMT)
புதுவையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் நிர்மல்குமார், தீபிகா, சாஜிதா பானு ஆகியோரிடம் 104 கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
கொரோனா சம்பந்தமான ஆவணங்களை பார்த்து முத்தியால்பேட்டை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் தொற்று காலத்தில் மருத்துவமனை ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சக்தி நகருக்கு சென்றார். அங்கு 4-வது குறுக்குதெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஓமியோபதி மாத்திரைகளை நாராயணசாமி வழங்கினார்.
கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கும் ஓமியோபதி மாத்திரையை வழங்கி, அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். அப்போது ஜான்குமார் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் நிர்மல்குமார், தீபிகா, சாஜிதா பானு ஆகியோரிடம் 104 கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
கொரோனா சம்பந்தமான ஆவணங்களை பார்த்து முத்தியால்பேட்டை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் தொற்று காலத்தில் மருத்துவமனை ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சக்தி நகருக்கு சென்றார். அங்கு 4-வது குறுக்குதெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஓமியோபதி மாத்திரைகளை நாராயணசாமி வழங்கினார்.
கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கும் ஓமியோபதி மாத்திரையை வழங்கி, அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். அப்போது ஜான்குமார் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X