search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை மாவட்டம்
    X
    மயிலாடுதுறை மாவட்டம்

    மயிலாடுதுறை எஸ்பியாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம்

    மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புதிதாக உருவான மயிலாடுதுறையும் சேர்த்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆனது.

    இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளை உருவாக்க சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×