என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வரும் யானைகள்
Byமாலை மலர்10 July 2020 2:36 PM GMT (Updated: 10 July 2020 2:36 PM GMT)
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் நல்ல மழை பெய்து பசுமையாக இருக்கிறது.
இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரபள்ளம் அருகே தேசியநெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 2 குட்டிகளுடன் 5 யானைகள் சாலையில் உலா வந்ததன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக உலா வந்த யானைகள் தானாக வனப்பகுதியில் சென்றன.
இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும், யானைகளின் அருகே சென்று செல்போனில் புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தை நிறுத்தவோ கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் நல்ல மழை பெய்து பசுமையாக இருக்கிறது.
இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரபள்ளம் அருகே தேசியநெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 2 குட்டிகளுடன் 5 யானைகள் சாலையில் உலா வந்ததன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக உலா வந்த யானைகள் தானாக வனப்பகுதியில் சென்றன.
இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும், யானைகளின் அருகே சென்று செல்போனில் புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தை நிறுத்தவோ கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X