என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்கம்பியை மிதித்த விவசாயி பலி - காப்பாற்ற முயன்ற நாயும் உயிர் விட்ட பரிதாபம்
Byமாலை மலர்9 July 2020 6:48 AM GMT (Updated: 9 July 2020 7:08 AM GMT)
கறம்பக்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற வளர்ப்பு நாயும் பரிதாபமாக உயிரிழந்தது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 47). விவசாயியான இவர் நேற்று காலை மழையூர் பெரமையா சுவாமி கோவில் அருகே உள்ள அவரது தோட்டத்திற்கு சென்றார். அவருடன் வளர்ப்பு நாயும் உடன் சென்றது. தோட்டத்திற்கு அருகே சென்றபோது அங்கே மழையினால் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் கருப்பையா மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அவருடன் வந்த வளர்ப்பு நாய், அவரது வேட்டியை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றது. ஆனால் மின்சாரம் தாக்கி நாயும் உயிர் இழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார், கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல, உயிரிழந்த நாயின் உடல் மழையூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான விவசாயி கருப்பையாவின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். தற்போது கருப்பையா இறந்த நிலையில் அவரது மகன், மகள் பெற்றோர் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இச்சம்பவம் மழையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X