search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    ஊட்டியில் முழு ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு

    ஊட்டியில் முழு ஊரடங்கை மீறிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று நீலகிரி மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பால் மற்றும் மருத்துவ தேவையை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது, மீறி வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதையடுத்து போலீசார் ஊரடங்கை மீறி வெளியே யாரும் வாகனங்களில் சுற்றுகிறார்களா? என்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஊட்டி நகரில் முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 15 பேர் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×