என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தறிகெட்டு ஓடிய டிரெய்லர் லாரி வீட்டிற்குள் புகுந்தது விபத்து: டிரைவர் பலி - குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்
Byமாலை மலர்6 July 2020 9:26 AM GMT (Updated: 6 July 2020 9:26 AM GMT)
தறிகெட்டு ஓடிய டிரெய்லர் லாரி வீட்டிற்குள் புகுந்ததில் டிரைவர் பலியானார். மேலும் குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்:
கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்றது. வேலூர் விருதம்பட்டை சேர்ந்த துரைராஜ் (வயது 60) என்பவர் டிரெய்லர் லாரியை ஓட்டினார். அவருடன் வேலூரை சேர்ந்த மற்றொரு டிரைவர் வெங்கடேசன் (45) உடன் சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சின்னகொம்மேஸ்வரம் பகுதி அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிரெய்லர் லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.
இந்தவிபத்தில் டிரைவர் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிரைவர் வெங்கடேசன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அஸ்மிதா (13), யுகேஷ் (12), சஞ்சய் (6) உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லாரியின் முன்பக்கத்தில் சிக்கியிருந்த லாரி டிரைவரின் உடலை நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்றது. வேலூர் விருதம்பட்டை சேர்ந்த துரைராஜ் (வயது 60) என்பவர் டிரெய்லர் லாரியை ஓட்டினார். அவருடன் வேலூரை சேர்ந்த மற்றொரு டிரைவர் வெங்கடேசன் (45) உடன் சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சின்னகொம்மேஸ்வரம் பகுதி அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிரெய்லர் லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.
இந்தவிபத்தில் டிரைவர் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிரைவர் வெங்கடேசன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அஸ்மிதா (13), யுகேஷ் (12), சஞ்சய் (6) உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லாரியின் முன்பக்கத்தில் சிக்கியிருந்த லாரி டிரைவரின் உடலை நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X