search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புஞ்சைபுளியம்பட்டி அருகே மது விற்றவர் கைது

    புஞ்சைபுளியம்பட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குரும்பபாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 49) என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூர்த்தியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 104 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×