search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரி பெரியகடை வீதி-மேலூர் சாலையில் காய்கறி வாங்க திரண்ட பொதுமக்கள்
    X
    சிங்கம்புணரி பெரியகடை வீதி-மேலூர் சாலையில் காய்கறி வாங்க திரண்ட பொதுமக்கள்

    சிங்கம்புணரி பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள்

    கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்பதை உணராமல் சிங்கம்புணரி பகுதியில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காமல் உள்ளனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி பகுதியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொதுவாக சிங்கம்புணரி பகுதியில் வாரச்சந்தை, தினசரி சந்தை உள்ளிட்ட சந்தைகள் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக காய்கறி கடைகள் போடுவதற்காக சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோவில் பகுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதியில் தற்காலிகமாக காய்கறி கடைகள் போடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சிங்கம்புணரி 4 ரோடு சந்திப்பில் இருந்து ஆரம்பித்த வாரச்சந்தை கடைகள் சீரணி அரங்கம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் காய்கறி கடைகளை வியாபாரிகள் போட்டதால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்காக பெரும் கூட்டமாக கூடினர்.

    இந்த சந்தையில் பொருட்கள் வாங்க வந்த பெரும்பாலான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் முககவசம் அல்லது கையுறை அணிந்தோ போதிய பாதுகாப்பு இல்லாமல் வந்திருந்தனர். இதுதவிர ஆங்காங்கே போடப்பட்ட காய்கறி கடைகளில் பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியில்லாமல் பொருட்களை வாங்கும் ஆர்வத்திலேயே இருந்தனர். கடை போட்ட வியாபாரிகளும் வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கவில்லை. சில வியாபாரிகள் முக கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்பதை உணராமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களால் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வாறு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், பொருட்கள் வாங்க வருபவர்களை போதிய சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்த வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காத வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×