search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குன்னூர் அருகே கொரோனா விழிப்புணர்வு முகாம்

    குன்னூர் அருகே எடப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி குன்னூர் அருகே எடப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கொரோனா சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு முன்னிலை வகித்தார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசியதாவது:-

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும். எனவே அனைவரும் சுகாதாரத்தை பேண வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வெளியூர்களில் இருந்து உறவினர்கள் யாரேனும் வந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்த நபர்களே பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனந்தா நேரு, எடப்பள்ளி ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் கோபால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×