search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாப்பிட்டதற்கு பணம் தராமல் ஓட்டல் ஊழியர்களை மிரட்டிய 2 பேர் கைது

    சாப்பிட்டதற்கு பணம் தராமல் ஓட்டல் ஊழியர்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்திரோட்டில் உள்ள பிரியாணி கடையில் 2 பேர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். இதனால் ஓட்டல் ஊழியர்கள் அவர்களை தடுத்து பணம் தாருங்கள் என்று கேட்டனர். அவர்கள் இருவரும் பணம் தர முடியாது என்று ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சின்ன காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தார். விசாரணையில் மிரட்டல் விடுத்தவர்கள் தாமல் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 23), ஓச்சேரி மாமண்டூரை சேர்ந்த சவுந்தர் (24) என்பதும் அவர்கள் மீது கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×