என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமி தற்கொலை சம்பவம்- போக்சோ சட்டத்தில் காதலன் கைது
Byமாலை மலர்27 Jun 2020 3:38 PM GMT (Updated: 27 Jun 2020 3:38 PM GMT)
இலுப்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தில் காதலனை கைது செய்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முரளிசங்கர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து கடிதம் மற்றும் புகைப்படங்கள், செல்போனில் வாட்ஸ்-அப் உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த தங்கத்தின் மகனான கார்த்திகேயன், அவரது அண்ணன் விக்னேஷ், தாய் செல்வி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த மாணவியை கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்ததும், இவர்களது காதலுக்கு கார்த்திகேயனின் அண்ணன், தாய் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது அண்ணன் மற்றும் தாயை தேடி வருகின்றனர்.
இலுப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முரளிசங்கர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து கடிதம் மற்றும் புகைப்படங்கள், செல்போனில் வாட்ஸ்-அப் உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த தங்கத்தின் மகனான கார்த்திகேயன், அவரது அண்ணன் விக்னேஷ், தாய் செல்வி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த மாணவியை கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்ததும், இவர்களது காதலுக்கு கார்த்திகேயனின் அண்ணன், தாய் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது அண்ணன் மற்றும் தாயை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X