search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமி தற்கொலை சம்பவம்- போக்சோ சட்டத்தில் காதலன் கைது

    இலுப்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தில் காதலனை கைது செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முரளிசங்கர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து கடிதம் மற்றும் புகைப்படங்கள், செல்போனில் வாட்ஸ்-அப் உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த தங்கத்தின் மகனான கார்த்திகேயன், அவரது அண்ணன் விக்னேஷ், தாய் செல்வி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அந்த மாணவியை கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்ததும், இவர்களது காதலுக்கு கார்த்திகேயனின் அண்ணன், தாய் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது அண்ணன் மற்றும் தாயை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×