என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம், அந்தியூரில் ரூ.80¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Byமாலை மலர்25 Jun 2020 12:02 PM GMT (Updated: 25 Jun 2020 12:02 PM GMT)
சத்தியமங்கலம் மற்றும் அந்தியூரில் ரூ.80¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
ஈரோடு:
சத்தியமங்கலத்தில் உள்ள கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், அரசூர், பெரியகுளம், கே.என்.பாளையம், தங்க நகர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் மூட்டைகளில் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 700-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 200-க்கும் என மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை ஆனது. சத்தியமங்கலம், திருப்பூர், அவினாசி, புஞ்சைபுளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 135 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 869-க்கும், அதிபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 339-க்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 81 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் மற்றும் அந்தியூரில் ரூ.80 லட்சத்து 81 ஆயிரத்து பருத்தி ஏலம் போனது.
சத்தியமங்கலத்தில் உள்ள கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், அரசூர், பெரியகுளம், கே.என்.பாளையம், தங்க நகர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் மூட்டைகளில் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 700-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 200-க்கும் என மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை ஆனது. சத்தியமங்கலம், திருப்பூர், அவினாசி, புஞ்சைபுளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 135 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 869-க்கும், அதிபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 339-க்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 81 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் மற்றும் அந்தியூரில் ரூ.80 லட்சத்து 81 ஆயிரத்து பருத்தி ஏலம் போனது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X