என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம்
Byமாலை மலர்21 Jun 2020 4:46 PM GMT (Updated: 21 Jun 2020 4:46 PM GMT)
புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், மாஸ்க் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் அண்யாமல் வெளியே சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
புதுச்சேரி கடற்கரை 10 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.
தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும், பால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 23 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X