என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி தாக்குதல்
    X
    விவசாயி தாக்குதல்

    வடலூரில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

    வடலூரில் விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடலூர்:

    வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜா(வயது 44) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம், ஞானசபை வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், ராமலிங்கத்தை மறித்து ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, தில்லை நடராஜன்(48), மோகனசுந்தரம் மனைவி கஸ்தூரி(37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×