என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடியில் அகழாய்வு பணி- கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
Byமாலை மலர்19 Jun 2020 7:24 AM GMT (Updated: 19 Jun 2020 7:24 AM GMT)
கீழடியில் அகழாய்வு பணியில் கொந்தகை பகுதியில் புதிய குழி தோண்டும் பணி நடைபெற்றபோது அதில் ஒரு அடி ஆழத்தில் 2 இடத்தில் முதுமக்கள் தாழிகளின் மேற்பகுதி அமைப்பு காணப்பட்டது.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் பகுதியில் 6-வது கட்ட அகழாய்வு பணி கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. கீழடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட ஒரு குழியில் 2 பானைகள் அருகருகே கண்டெடுக்கப்பட்டன. அதன் அருகே மணல் சூழ்ந்திருந்த நிலையில் அதை தோண்டும்போது நீளமாக செங்கற்கள் அடுக்கிய நிலையில் பானையின் அடிப்பாகத்தில் வடிகால் போன்ற அமைப்பு தென்பட்டது. தற்போது அதை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கொந்தகை பகுதியில் புதிய குழி தோண்டும் பணி நடைபெற்றபோது அதில் ஒரு அடி ஆழத்தில் 2 இடத்தில் முதுமக்கள் தாழிகளின் மேற்பகுதி அமைப்பு மட்டும் காணப்பட்டது. இதை இன்னும் ஆழமாக குழிகள் தோண்டும் போது இந்த முதுமக்கள் தாழியின் விவரங்கள் குறித்து தெரிய வரும். மேலும் கொந்தகை பகுதியில் அகழாய்வு பணி நடைபெறும் இடத்திற்கு எதிரே தனியார் நிலத்தில் முதுமக்கள் தாழியில் மனித மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் சிறிய வகை குடுவைகள் ஆகியவைகளை மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் குழுவினர் ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நிலத்தில் முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தும், மேலும் பல்வேறு குழிகள் தோண்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் பகுதியில் 6-வது கட்ட அகழாய்வு பணி கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. கீழடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட ஒரு குழியில் 2 பானைகள் அருகருகே கண்டெடுக்கப்பட்டன. அதன் அருகே மணல் சூழ்ந்திருந்த நிலையில் அதை தோண்டும்போது நீளமாக செங்கற்கள் அடுக்கிய நிலையில் பானையின் அடிப்பாகத்தில் வடிகால் போன்ற அமைப்பு தென்பட்டது. தற்போது அதை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கொந்தகை பகுதியில் புதிய குழி தோண்டும் பணி நடைபெற்றபோது அதில் ஒரு அடி ஆழத்தில் 2 இடத்தில் முதுமக்கள் தாழிகளின் மேற்பகுதி அமைப்பு மட்டும் காணப்பட்டது. இதை இன்னும் ஆழமாக குழிகள் தோண்டும் போது இந்த முதுமக்கள் தாழியின் விவரங்கள் குறித்து தெரிய வரும். மேலும் கொந்தகை பகுதியில் அகழாய்வு பணி நடைபெறும் இடத்திற்கு எதிரே தனியார் நிலத்தில் முதுமக்கள் தாழியில் மனித மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் சிறிய வகை குடுவைகள் ஆகியவைகளை மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் குழுவினர் ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நிலத்தில் முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தும், மேலும் பல்வேறு குழிகள் தோண்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X