என் மலர்
செய்திகள்

ரெயில்
வடமாநில தொழிலாளர்கள் 3,200 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
நீலகிரி மாவட்டத்தில் இருந்து இதுவரை வடமாநில தொழிலாளர்கள் 3,200 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் 7,255 பேரில், விருப்பம் தெரிவித்தவர்களை சொந்த ஊர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஓட்டலில் பணிபுரிந்த 4 பேர் மேகாலயா மாநிலத்துக்கு செல்ல வருவாய்த்துறையினர் வழியனுப்பி வைத்தனர். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அவர்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கார் மூலம் ஊட்டியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து இதுவரை வடமாநில தொழிலாளர்கள் 3,200 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று தங்களது சொந்த செலவில் சிறப்பு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
Next Story






