என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
சென்னையில் இருந்து சீர்காழி வந்த 2 பேருக்கு கொரோனா
சென்னையில் இருந்து சீர்காழி வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பெண்ணும், சீர்காழி திருத்தளமுடையார் கோவில் தெருவை சேர்ந்த பெண்ணும் கடந்த 11-ந் தேதி சென்னைக்கு சென்று பின்னர் சீர்காழிக்கு வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






