search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    ஒரே நாளில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.19 ஆயிரம் அபராதம் வசூல்

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூரில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் கையுறை, முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூரில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் கையுறை, முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வேலூர் 2,3,4-வது மண்டல சுகாதார அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது முககவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். 2-வது மண்டலத்தில் ரூ.5 ஆயிரமும், 3-வது மண்டலத்தில் ரூ.1,200-ம், 4-வது மண்டலத்தில் ரூ.13 ஆயிரம் அபராதம் என்று மொத்தம் ரூ.19,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    Next Story
    ×