என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    வேதாரண்யம் அரசு கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதியில் இதுவரை 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வேதாரண்யத்தில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக கல்லூரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்றும், கோரிக்கை குறித்த மனுவை கலெக்டரிடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
    Next Story
    ×