என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரத்தில் சமூகஇடைவெளியை கடைபிடிக்காத 11 கடைகளுக்கு சீல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரேனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் பெரு நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி காஞ்சிபுரம் காந்தி சாலை, விளக்கடி கோயில் தெரு, மேட்டுத்தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடை, சைக்கிள் விற்பனை நிலையம், பழக் கடை, ஜியோ விற்பனை நிலையம் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது சமூக இடை வெளியை முறையாக பின் பற்றாத 11 கடைகளுக்கு சீல் வைத்து எச்சரித்தார்.
இதேபோல் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி துணை வட்டாட்சியர் நடராஜன் மற்றும் பெரு நகராட்சி ஊழியர்கள் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நகர சாலைகளில் இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர்.
ஒரேநாளில் 750 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 75ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.






