search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாளருக்கு கொரோனா

    மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் மானாமதுரையைச் சேர்ந்த 52 வயதுடையவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    தினந்தோறும் இவர் காரில் மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது எப்படி? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா உள்ளதா? என்று சுகாதார துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×