என் மலர்
செய்திகள்

கைது
கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேர் கைது
கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சின்னப்பன் ஆகியோர் கறம்பக்குடி மீன்மார்க்கெட், திருமணஞ்சேரி பாலம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற குமார் (வயது 65), சிவா(19), முருகானந்தம்(47) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






