என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேவகோட்டையில் அதிமுக சார்பில் 100 ஆட்டோக்களுக்கு பெட்ரோல்
தேவகோட்டை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஏழை குடும்பங்கள் சிரமப்பட்டு வந்தன.
தற்போது நிபந்தனையுடன் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதை அறிந்த அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் ஆசைத்தம்பி சொந்த செலவில் தேவகோட்டையில் உள்ள சுமார் 100 ஆட்டோக்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செந்தில்நாதன் ஆட்டோக்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லாகணேசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கார்த்திகேயன், நகர மாணவரணி மணி கண்டபிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்