search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    கிருமாம்பாக்கம் அருகே கொரோனா பாதித்த பகுதியை நாராயணசாமி ஆய்வு

    கிருமாம்பாக்கம் அருகே கொரோனா பாதித்த பகுதியை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டார்.
    பாகூர்:

    புதுவை மாநிலம் அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த தலா ஒருவர் வீதம் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மதி கிருஷ்ணாபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் கணவன்-மனைவி, மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். உடனே அந்த பகுதியை சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் பேட் பகுதியில் சென்னையில் பணிபுரிந்து வந்த வாலிபர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கந்தசாமி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சென்று அங்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள பகுதியை நேற்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் வந்து பார்வையிட்டார்.

    அங்கு வசித்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை, தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதில் அமைச்சர் கந்தசாமி, கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி டாக்டர் நாராயணன், பாகூர் தாசில்தார் குமரன், பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×