என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மானாமதுரையில் பெண் அடித்துக்கொலை- போதையில் மகன் வெறிச்செயல்
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராஜ். இவரது மனைவி முனியாயி (வயது60). இவர்களது மகன் ஜெயச்சந்திரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
ஜெயச்சந்திரனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது குழந்தைகளை பாட்டி முனியாயி பராமரித்து வந்தார்.
நேற்று பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்க முனியாயி, குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஜெயச்சந்திரன், குழந்தைகள் தனியாக இருப்பதை பார்த்து ஆத்தரம் அடைந்தார். அப்போது அவரது தாய் முனியாயி அங்கு வரவே ஜெயச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன் தாயை சரமாரியாக தாக்கினார். ரத்த காயம் அடைந்த முனியாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் சம்பவ இடம் வந்து முனியாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜெயச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்