என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 Jun 2020 9:05 AM GMT (Updated: 5 Jun 2020 9:05 AM GMT)
நாகை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜீவாராமன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7ஆயிரத்து 500 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும். நுண்கடன் நிறுவனங்களில் குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதேபோல திருமருகல் ஒன்றியம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருமருகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் லெனின், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சதீஷ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் தியாகராஜன், சிங்காரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவை.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொறையாறில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் கபிரியேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜீவாராமன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7ஆயிரத்து 500 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும். நுண்கடன் நிறுவனங்களில் குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதேபோல திருமருகல் ஒன்றியம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருமருகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் லெனின், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சதீஷ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் தியாகராஜன், சிங்காரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவை.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொறையாறில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் கபிரியேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X