என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.கருணாநிதியின் சிலைக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் மாலை அணிவித்ததை படத்தில் காணலாம்.
    X
    மு.கருணாநிதியின் சிலைக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் மாலை அணிவித்ததை படத்தில் காணலாம்.

    பிறந்தநாள் விழா : கருணாநிதி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    ஈரோடு:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றிவைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

    மாநில துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக ஈரோடு முனிசிபல் காலனியிலும், மணல் மேட்டில் கட்சி அலுவலகத்திலும் உள்ள கருணாநிதி சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டல அமைப்புச்செயலாளர் நா.விநாயகமூர்த்தி கலந்துகொண்டு கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி, நகர அமைப்பாளர் சையது, மாவட்ட பேச்சாளர் உசைன், பொருளாளர் அப்சர், ஆல்பர்ட் என்கிற ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆதித்தமிழர் பேரவை சார்பில் நிறுவன தலைவர் அதியமான் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், நிதிச்செயலாளர் பெருமாவளவன், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×