என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குன்னூர், கோத்தகிரியில் அட்டகாசம் செய்யும் கரடி கூட்டம்- பொதுமக்கள் பீதி
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர், கொலக்கம்பை, கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வசாதாரணமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோத்தகிரி நகரப்பகுதியில் உள்ள 'டானிங்டன்' நியாயவிலை கடையில் இரவில் குட்டியுடன் வந்த கரடிகள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை நாசம் செய்துள்ளது மேலும் அதே பகுதியில் உள்ள பேக்கரி கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கரடிகள் தொடர்ந்து கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வருவதால் மரங்களில் கதவுகள் வைத்த கடைக்காரர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்